Wednesday, December 30, 2015

முருங்கை - பசி-பிணி போக்கும் ஓர்  அற்புத மரம் 
Moringa  Olderifera - a miracle tree to feed the world hunger
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. குறள் - 945
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
Couplet 945 

With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel
Explanation
There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable
மொதல்ல யாளி நா என்னனு தெரிஞ்சிக்குவோம். யாளி என்பது தென்னகத்துக் கோயில்களில் சிற்பங்களாகக் காணப்படும் ஒரு விலங்குருவம். சிங்கம் + யானை = யாளி என்பது போல் சிங்கத்திற்குத் துதிக்கை வைத்தது போல் இருக்கும். யாளியில் இன்னொரு வகை சிங்க வாயிலிருந்து நீண்ட நாக்கு கொண்டதாக இருக்கும். சிங்கத்திற்குச் சிறகுகள் முளைத்த வடிவ யாளியும் உண்டு. மீனினம் போன்றதொரு யாளியையும் இந்நாவல் வழி அறிந்தேன். இந்த வடிவங்கள் கோயில்களின் சிலைகளில் காணப்படுகின்றன.நாவலின் பெயர் “யாளி”. எழுதியிருப்பவர் மணி தனிகை குமார்.

Inline images 2

சமூலம் என்றால் அணைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்ட ஓர்  அற்புத மரம் முருங்கை.  பனையைபோல்!
அகத்திய முனிவர்முருங்கைக் கீரையை நெய்யில் பொரித்து தினமும் உண்டு  வர யாளி போல் பலம் பெருகும்                                                  
என்கிறார்யாளி பத்து யானைகளின் பலம்கொண்டது என்பார்கள்இதை தெரிவிக்கும் அகத்திய முனிவர்களின் பாடல் –

"நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை 
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாளியென
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்"

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்; நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை; அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை.  
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாளி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


அகத்தியர் குணபாடத்தில் வரும் சித்தர் பாடல் ஒன்று கீழ்வருமாறு
செறிமந்தம் வெப்பந் தெரிவிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகு – மறமே
நெருங்க யிலையத்த விழி நேரிழையே நல்ல
முருங்கை யிலையை மொழி.
முருங்கை இலையினால் அக்கினி, மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிமூர்ச்சை, ( ஆக  வாதம், பித்தம், கபம்) & கண்ணோய் ஆகியவை நீங்கும்.

இலைக்காம்பு:
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பூ:
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப்பெறும்.
முருங்கைப் பிஞ்சு:
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

முருங்கை பொடி: 

Moringa powder contains, inter alia, vitamin A, vitamin B1, vitamin B2, vitamin B3, vitamin B6, vitamin B7, vitamin B9, vitamin C, Vitamin D, Vitamin E, Vitamin K, boron, iron, potassium, calcium, copper, magnesium, manganese , phosphorus, sulfur, selenium, silicon, zinc.

பேராசிரியர் பெக்கர் ஆராய்ச்சியின்  முடிவில் முருங்கையில் ஊட்டச்சத்துக்களும், முக்கிய தாதுக்களும் அதோடு ஒப்பிட்ட 1000 செடிகளை விட அதிக அளவில் உள்ளது என முருங்கையின் பெருமையை உலகரிய செய்தார். தற்போது பல நிறுவனங்கள் முருங்கை பொடி விற்பனையில் கால் பதிக்க தொடங்கி விட்டது. 
FAO முருங்கையை உலகின் நோய், பஞ்சம் தீர்க்கும் உணவாக அறிவித்துள்ளது. 


Inline images 1Inline images 2
75 கிராம் பொடி ~ 12 € மட்டுமே (~850 ரூபாய்)! Tegut supermarket 28.10.2015

 "Indian Journal of Pharmacology” January 2008 இல் வெளிவந்த ஓர்  ஆராய்ச்சி முடிவு, முருங்கை ஆஸ்துமாவை குணபடுத்தும் வல்லமை உள்ளது என நிரூபித்துள்ளது.

வாழை, பால், பாலக் கீரை, காரட், தயிர், ஓட்ஸ், முட்டை = 100 கிராம் முருங்கை இலை உணவு. 

பாலை விட 4 மடங்கு ஜாஸ்தி கால்சியம் இருந்தாலும், அதிகம் விளம்பர படுத்த ஒரே காரணத்துக்காக சத்துள்ள முருங்கைய விட்டுட்டு சத்தில்லா விசமேறிய பாக்கெட் பால் கொடுத்து குழந்தைகளையும் முதியோர்களையும் ஆரோகியப்படுத்துவோமாக!

முருங்கை விதையில் குடும்பம் விருத்தி
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.
முருங்கை விதை நீர் சுத்திகரிப்பிற்கு பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. FAO இதை பரிந்துரை செய்துள்ளது. நம்புங்கள் எந்தப் பக்கவிளைவும் இல்லாத வயாகரா விளைவுகள் கீரைகளில் இயற்கையாகவே பொதித்துவைக்கப்பட்டு இருக்கிறது.
முருங்கை எண்ணெய் : 
Vitamin A, B,C, D, E, K, Folate, Biotin, Omega 3, 6, 9 Oil, Zeatin
Folate  - புற்று நோயை விரட்டும், Zeatin  - the "fountain of youth hormone" - தோல் வயது முதிர்ச்சியை கட்டுப்படுத்தும். 

Inline images 2



There is a widespread thinking that certain essential nutrients, calcium, magnesium, omega 3, 6, 9 fatty acid (Yes, Moringa oil has all three of them. No other commercial oil has all three together, not even Olive oil) can be supplied only through meat, egg, fish consumption. Moringa has all of them. 
Moringa contains 7 times more Vitamin C than orange, 4 time more calcium and vitamin A than milk and carrot, 3 times more K than banana and more iron than spinach!

Olive எண்ணையில் மட்டுமே,முருங்கை  எண்ணை போல்  70% ஒமேகா  9 உள்ளது. அதோடு நில்லாமல், ஒமேகா 3, 6 மற்றும் அதிக அளவு antioxidant கொண்டுள்ளதால் விரைவில் கெடாது (கொதிநிலை 220*C ), மிகச்சிறந்த பதப்படுத்தியாக பயன்படுத்தலாம். 
ஆயுர்வேதத்தில் தோல், மற்றும் மூட்டு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. ஆக தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் உள்ளவர்கள், வரும்முன் காப்போர் இதனை தோலில் பூசி பயன் பெறலாம். முருங்கை ஓர்  அற்புத கிருமி நாசினி, ஆகையால் இதன் அணைத்து பாகங்களும் பொடியாகவோ, சாறாகவோ, எண்ணெய் இவற்றை உடலில் பூசி தோலை பாதுகாப்பதோடு நல்ல நறுமணமும் பெறலாம். இதை தெரிஞ்சவன் எப்படி நறுமனபொருட்கள் தயாரிச்சி விக்குறான் பாருங்க... 
Inline images 3
கையில நெய்ய வெச்சுகிட்டே நாம Amway, Fair and Lovely, Fairness போன்ற போலி டால்டா வின் சுவைக்கு அடிமையகிட்டோம்!
முருங்கை பூசி முகப்பொலிவை பெறுங்கள். 

முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியே…
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
பித்தம் குறைய:
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும்.
பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு:
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
  " நித்திய கண்டம் பூரண ஆயுசு " என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு:
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு:
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம்
மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

முருங்கைய ஓர்  அற்புத மரம் நு அறிவிச்சு அதை பற்றி வந்த ஆவணப்படங்களில் சில : https://www.youtube.com/watch?v=-9e2WNPdN-I
Inline images 4
இந்த கற்பகவிருட்சம் பற்றி பல ஆராய்ச்சிகளும் (தோல் வியாதி, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய்) அதை தினப்பயன்பாட்டிலும் ஐரோப்பாவில் அதிகரித்து வருகிறது. இந்த 69 நிமிட காணொளியை கண்ட பின் ஏன் 75 கிராம் முருங்கை பொடியை ~850 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். 

அதே நேரத்துல பல வெளிநாட்டு நிறுவனங்கள் காட்ற ஆர்வத்த பாக்கும் போது, மகிழ்ச்சியைவிட பயமே அதிகமா வருது. உற்சாக பானம், ஊட்டச்சத்து மாத்திரை, எடை குறைப்பு அஸ்திரம், முகம் & தோல் பூச்சு நு இதை நம்ம கிட்டயே ஊரப்பட்ட விலைக்கு விக்கப்போரனுங்க!! பாருங்க இந்த காணொளியை

ABCDEK நு எல்லா சத்துக்களும் இருக்குங்க இதுல, இன்னும் என்ன பாக்குறீங்க போய்  முருங்கைக்காய்  சாம்பார், முருங்கை இலை வதக்கல், பூ கூட்டு என்று பட்டய கிளப்புங்க...

முருங்கை நு இல்லைங்க, பொதுவா கீரை… 30-40 நாளில் வளரும் பொக்கிஷம். தினம் ஒரு கீரை சாப்பிடுவது ரத்தசோகை, மலச் சிக்கல், பலக் குறைவு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு எனப் பல நோய்க்கும் மருந்து. ‘பொன்னாங்கண்ணிக்கு புளிஇட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு’ எனப் பெண்ணுக் கும்… ‘போன கண்ணும் திரும்புமாம், பொன் னாங்கண்ணியினாலே’ எனக் கண்ணுக்கும் மருந் தாகும் உணவான பொன்னாங்கண்ணிக் கீரை இன்று எத்தனை பேர் வீட்டில் சமைக்கப்படு கிறது? மாசத்துக்கு ஒருக்கா இல்ல, தினமும்?

இந்த அவரச யுகத்துல கீரை வாங்கி, ஆய்ந்து எடுத்து, நாட்டுப்பசு நெய் கொண்டு கீரையைச் சமைக்காட்டியும், கிடைக்குற கீரைய அப்பப்ப அழகா உலர்த்தி பொடி  பண்ணி வெச்சுண்டா, இட்லி, சாம்பார், தோசை, வடை, பூரி, ரசம், கூட்டு, அவியல், பழச்சாறு, துவையல் & விலங்கு கறி என எல்லாவித உணவிலும் கலந்து சாப்பிடலாம். உலர்ந்த இலை / பொடி  சுடுதண்ணி ல போட்டு அருமையான தேநீர், மூலிகை வடிநீர் (காப்பி) காய்ச்சி சாப்பிடலாம்தானே! என்ன, ஆரோக்கியமா இருக்கனும் என்ற மனசும் அதுக்கான மெனக்கெடலும் கொஞ்சம் அதிகமாவே தேவை!  இந்த மெனக்கெடல் தேவை இல்லையா இருக்கவே இருக்கு வைட்டமின், கால்சியம், மேக்னிசியம் மாத்திரைகள், பாக்கெட் பால், வெள்ளை சொக்காய்  போட்ட ஆங்கில மருத்துவர்கள்!

மேலும் இப்பூவின் சில மருத்துவ குணங்கள் 
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.


இந்த அற்புத மரத்தின் பயன்களை மேலும் அறிய



சில எளிய மருத்துவ குறிப்புகள்:
இதன் இலையை கட்டிகள் உடைவதற்கும் வதக்கிக் கட்டுதல் உண்டு.
உடல் வலிமை மட்டுமல்ல, உள்ளிருக்கும் நரம்புகளையும் வலுப்படுத்தும். நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
மூட்டுவலிகள் போக, தினமும் முருங்கை கீரையை உப்புடன் வேக வைத்து 15 நாள் சாப்பிடவும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் விலகும்.
முருங்கை கீரையில் விட்டமின் ‘ஏ’ இருப்பதால் கண்பார்வைக்கு நல்லது. நீர் விடாமல் வேக வைத்து கண்களின் மீது வைத்து கட்டினால் கண் நோய்கள் நீங்கி இலையின் ரசத்துடன் தேன் சேர்த்து கண்ணிமைகளில் தேய்க்கலாம்.
முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் ‘பற்று’ போடலாம்.
இலைச்சாற்றை 40 கிராம் அளவில், கொடுக்க, நன்றாக வாந்தியாகும்.
முருங்கை கீரை இரத்த சோகையை போக்கும். 10 மிளகு சேர்த்து அரைத்த முருங்கைக் கீரை (ஒரு கைப்பிடி) யை 15 நாள் சாப்பிட வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, 20 நாள் தினசரி காலை, மாலை இரு வேளை தேன் + முருங்கை இலைச்சாறு (15 மில்லி) + 10 மிளகு (பொடித்தது) அருந்தி வரவும்.
முருங்கை கீரை ஆண்மையை பெருக்கும். அதன் சாற்றில் ஜாதிக்காயை உடைத்து சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உலர்த்தி, பொடியாக்கி தினமும் இரவில் 2 கிராம் சாப்பிட்டு வர, காதல் உணர்வுகள் அதிகமாகும்.
சிறுநீர் தாராளமாக, சுலபமாக பிரிய பார்லி கொடுப்பதுண்டு. அத்துடன் முருங்கை கீரை, சீரகம் (கால் ஸ்பூன்) சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாக பிரியும். முருங்கை கீரை சாற்றை குடித்தால் வயிற்று வலி தீரும்.
முருங்கை இலைகளை அரைத்து சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
எள் சேர்த்து சமைத்த முருங்கை கீரை கூட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
முருங்கைக் கீரை ஒரு சர்வரோக நிவாரணி. மலச்சிக்கலை சீக்கிரமாக போக்கும்.
100 கிராம் முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்